search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை தண்டனை"

    • சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
    • தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

    சென்னை:

    பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த 2018-ம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    • எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நவால்னி உயிரிழந்தார்
    • கணவரை கொன்றவர்களின் முகங்களை உலகிற்கு காட்டுவேன் என்றார் யூலியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகரும், ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி (Alexei Navalny) பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவ்வருடம் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார். சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) இது குறித்து தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார்.


    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    3 தினங்களுக்கு முன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார்.

    கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.

    அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.

    அலெக்சிக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், மேலும் வேகத்துடனும் போராடுவதுதான்.

    போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும்.

    எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன். அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம்.

    இவ்வாறு யூலியா கூறினார்.

    யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷிய அரசு மறுத்து விட்டது.

    • அரிசி மானிய வழக்கில் சிறை தண்டனை பெற்றார் சின்வத்ரா
    • மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் சின்வத்ராவின் தண்டனையை 1 ஆண்டாக குறைத்தார்

    தென்கிழக்கு ஆசியாவில், இந்தோசீன தீபகற்பத்தில் உள்ள நாடு, தாய்லாந்து. இதன் தலைநகரம், பாங்காக் (Bangkok).

    தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின் சினவத்ரா (Thaksin Shinawatra) மீது அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தக்சினுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, தக்சின், 2008ல் தாய்லாந்தை விட்டு வெளியேறி, 15 ஆண்டுகள் அயல்நாடுகளில் தங்கி இருந்தார்.

    கடந்த 2023ல் மீண்டும் நாடு திரும்பினார்.

    தாயகம் திரும்பிய தக்சினுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், தக்சின் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிறையிலிருந்து 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


    தக்சினின் உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட 8-ஆண்டுகால சிறை தண்டனையை, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), 1 ஆண்டாக குறைத்தார்.

    இதனை தொடர்ந்து தக்சின் சினவத்ராவுக்கு சிறப்பு பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து, தற்போது 76 வயதாகும் தக்சின் இன்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

    பாங்காக் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தக்சின் தனது காரில் புறப்பட்டு சென்றார். தக்சினை அவரது மகள் பெடோங்டார்ன் சினவத்ரா (Paetongtarn Shinawatra) வரவேற்று தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.


    தக்சின், 2 முறை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

    தாய்லாந்தில் நடைபெறும் பிரதமர் சிரெத்தா தவிசின் (Srettha Thavisin) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, தக்சின் குடும்பத்தார் பின்புலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.
    • 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.

    3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ந்தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

    • அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
    • இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


    இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை கோர்ட்டு விதித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
    • ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.
    • சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் வழக்கு.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.

    சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்று அதில் சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
    • 8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 பேர் மேற்கு ஆசிய நாடான கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வேறு நாட்டுக்காக தங்களது நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக 8 பேரையும் கத்தார் கடற்படை கைது செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. அதற்கு எதிராக அவர்களுடைய குடும்பத்தினர், கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில், மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து, மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

    • 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கிகளால் பயனடைந்தனர்
    • 170 உலக பிரபலங்கள் அவர் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினர்

    வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) என்பவர், 1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.

    2022 ஜனவரி மாத காலகட்டத்தில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கியால் பயனடைந்தனர்.

    தற்போது 83 வயதாகும் முகமது யூனுஸ், வங்காள தேசத்தில் லாப நோக்கமற்ற (not-for-profit) சேவை உணர்வோடு கிராமின் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக யூனுஸ் மற்றும் 3 பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டின் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    2023 ஆகஸ்ட் மாதம் உலகளாவிய பிரபலங்கள் 170 பேர் பேராசிரியர் யூனுஸ் மீதான சட்டரீதியான தாக்குதலை நிறுத்துமாறு வங்காள தேச பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 6 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

    "எந்த விதிமுறைகளுக்கும் பொருந்தாத தீர்ப்பு இது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை" என பேராசிரியர் யூனுஸ் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

    வங்காள தேச பிரதமர் ஹசினா ஷேக் (Sheikh Hasina) ஒரு முறை, "பேராசிரியர் யூனுஸ், ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்" என கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாலமுருகனை மேலே வர விடாமல் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார்.
    • போலீசார் சதீஷ் என்கிற கோபாலை கைது செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகில் உள்ள கம்புளியம்பட்டி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் பாரதி. இவர் தனது கணவர் குமாரசாமி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்த தனது மகன் பாலமுருகனுடன் (12) தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பால முருகன் சாணார்பாளை யத்தில் உள்ள ஒரு தோட்ட த்து கிணற்றில் நீச்சலடித்து விளையாடி வருவது வழக்கம். அது போலவே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி பாலமுருகன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளான்.

    குளித்து முடித்து விட்டு மேலே வரும்போது கிணற்று படியில் யாரோ கழட்டு விட்ட செருப்பு ஒன்று பாலமுருகனின் கால்பட்டு கிணற்றுக்குள் நின்று கொண்டிருந்த மேற்கு சாணார்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ் என்கிற கோபால் (27) என்பவர் மீது விழுந்தது.

    இதனால் கோபமுற்று கோபால் யாருடா என்மீது செருப்பை தள்ளிவிட்டது என கேட்க, பாலமுருகன் தனது கால் பட்டு தெரியா மல் செருப்பு விழுந்து விட்டது என கூறினான்.

    பின்னர் நானே வந்து அந்த செருப்பை எடுத்து வருகிறேன் என்றும் கூறி கிணற்றுக்குள் குதித்து செருப்பை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கு அருகில் பாலமுருகன் நீந்தி வரும்போது, கோபத்தில் இருந்த சதீஷ் என்கிற கோபால், பாலமுருகனை மேலே வர விடாமல் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார்.

    இதனால் பாலமுருகன் மூச்சு திணறி இறந்து விட்டார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் என்கிற கோபாலை கைது செய்தனர். இது தொடர்பாக பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண பிரியா, சதீஷ் என்கிற கோபாலுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபரா தமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் திருமலை ஆஜராகி வழக்கை நடத்தினார்.

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • 2 பேர் கைது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்ப ட்டுள்ளன.

    இது சம்பந்தமாக வடுகசாத்து, அரையாளம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்றவற்றை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் ஆரணி டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற வியாபாரிகள்ஆலோசனை கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் அனை வரையும் வரவேற்றார். டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் தாங்கினார்.

    இதில் மொத்த வியாபாரிகள் மளிகை கடை வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி. ரவிசந்திரன் பேசியதாவது:-

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை வஸ்துக்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    அதே போல மற்ற வர்கள் விற்ப னை செய்தால் 10,581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகளை டி.எஸ்.பி ரவி சந்திரன் அறிவுறுத்தினார்.

    ×